» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நண்பர் வீட்டிற்கு சென்ற யூடியூபர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை!

புதன் 10, செப்டம்பர் 2025 7:56:53 AM (IST)

தூத்துக்குடியில் நண்பர் வீட்டிற்கு சென்ற யூடியூபர் மாயமான சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த மாசானமுத்து மகன் முருகன் (56). இவருக்கு மனைவி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் சென்னை தாம்பரம் இரும்புலி­யூரில் அரிசி கடை வைத்திருப்பதோடு, ஆன்மிகம் சம்பந்தமான யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

முருகன், தூத்துக்குடியில் உள்ள தம்பி சரவணன் வீட்டிற்கு சென்றார். கடந்த ஆக.18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர், ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணா புரத்தில் உள்ள தனது நண்பர் அசோக் வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆக. 29ஆம் தேதி தனது நண்பர் அசோக்கிடம் தூத்துக்குடி செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற அவர் கடந்த 9 நாள்களாக தேடிப் பார்த்தும் காணவில்லை என முருகனின் தம்பி சரவணன் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory