» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா சிறப்பு திருப்பலி

புதன் 10, செப்டம்பர் 2025 7:50:20 AM (IST)



தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஜெபமாலை, சிறப்புத் திருப்பலி, அன்னையின் திருவுருவ சப்பர பவனி, அசன விருந்து ஆகியன நடைபெற்றன.

நிறைவு நாளன்று கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் பிராங்க்ளின் பர்ணாந்த் தலைமையில், புனித அகுஸ்தினார் சபை சந்தியா விசுவாசம், லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை செல்வன் பெர்னான்டோ ஆகியோர் கலந்துகொண்டு ஆடம்பர திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை தங்கத்தேர் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் இணைந்து செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory