» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்பி ஆலோசனை!!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:51:23 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சார்பு ஆய்வாளர்கள்/சிறப்பு சார்பு ஆய்வளார்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் (Child Welfare Officer) செயல்பட்டு வருகின்றனர்.
மேற்படி குழந்தைகள் நல காவல் அலுவர்களுக்கான அறிவுரைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆல்பர்ட் ஜான் தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்களை கையாள்வது குறித்தும், அவர்களை கையகப்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்தும், இளைஞர் நீதி குழுமத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கினார்.
இதில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு, தூத்துக்குடி சிறப்பு சிறார் காவல் அலகின் பொறுப்பு அதிகாரியும் மாவட்ட குற்றப் பிரிவு-I காவல் துணை கண்காணிப்பாளருமான ராஜூ உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










