» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செங்கல் சேம்பரில் மின்சாரம் தாக்கி மெஷின் ஆபரேட்டர் பலி

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:47:44 AM (IST)

ஏரல் அருகே செங்கல் சேம்பரில் மின்சாரம் தாக்கி மெஷின் ஆபரேட்டர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள கொட்டாரக்குறிச்சி அண்ணா நகரைச் சேர்ந்தவர் சுடலை மகன் லட்சுமணன் (41) இவர் ஏரல் புதுமனையில் உள்ள சேம்பரில் செங்கல் அறுக்கும் மெஷினில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.  இவர் இன்று காலை சுமார் 5 மணி அளவில் மெஷினில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார்.  

உடனடியாக அவரை ஏரல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக இவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory