» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:40:19 AM (IST)

கோவில்பட்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வஉசி நகரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் கணேசன் (47). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இளையரசனேந்தல் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இவரது பைக் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, லாரியை ஓட்டி வந்த கோவில்பட்டி மந்திதோப்பைச் சேர்ந்த பாண்டி மகன் உத்தண்டகுமார் (20) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory