» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:40:19 AM (IST)
கோவில்பட்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வஉசி நகரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் கணேசன் (47). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இளையரசனேந்தல் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இவரது பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, லாரியை ஓட்டி வந்த கோவில்பட்டி மந்திதோப்பைச் சேர்ந்த பாண்டி மகன் உத்தண்டகுமார் (20) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










