» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழுகாசலமூர்த்தி மலையில் பவுர்ணமி கிரிவலம் : திரளான பக்தர்கள் வழிபாடு!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:18:43 AM (IST)



ஆவணி பவுர்ணமி தினத்தையொட்டி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று முன்தினம் ஆவணி பவுர்ணமியையொட்டி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். பின்னர் சந்திரகிரகணத்திற்காக மதியம் 2 மணி முதல் கோவில் நடை சாத்தப்பட்டது. இரவு வரை கோவில் திறக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்லவில்லை.

இந்நிலையில் நேற்று சந்திரகிரகணம் முடிந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 7 மணியளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணியளவில் திரளான பக்தர்கள் கோவில் முன்பிருந்து கிரிவலம் புறப்பட்டனர். இதை கோவில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என்ற கோஷத்துடன் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory