» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவையின் உறுதிமொழி குழு ஆய்வு - ஆட்சியர் தகவல்

திங்கள் 8, செப்டம்பர் 2025 5:09:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 12ஆம் தேதி சட்டமன்றப் பேரவையின் உறுதிமொழி குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழி குழு 12.09.2025 அன்று காலை குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் (பண்ருட்டி) தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுத்துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். மேலும் மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழி குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் (பண்ருட்டி) தலைமையில், குழு உறுப்பினர்களாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), இரா.அருள் (சேலம் மேற்கு), மு.சக்ரபாணி (வானூர்), ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர்), கோ.தளபதி (மதுரை வடக்கு), A.நல்லதம்பி (திருப்பத்தூர்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ரா.மணி (ஓமலூர்) , சா.மாங்குடி (காரைக்குடி), M.K.மோகன் (அண்ணா நகர்), S.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory