» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை

திங்கள் 8, செப்டம்பர் 2025 12:38:22 PM (IST)

தூத்துக்குடியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி உள்பட நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் சுனாமி காலனி குடியிருப்பு பகுதியில் தங்கியிருக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதுபோல் நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  ஜம்மு-காஷ்மீரில் ஒன்பது இடங்களில் சோதனை நடப்பதாகவும், பிகாரில் எட்டு இடங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு இடங்களிலும், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் சோதனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory