» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த 4ஆயிரம் லிட்டர் பயோ டீசல் பறிமுதல் - டிரைவர் கைது!
திங்கள் 8, செப்டம்பர் 2025 10:38:18 AM (IST)

தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 4ஆயிரம் லிட்டர் பயோ டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறி வைத்து கள்ளசந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தனர். அதன்பேரில் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் தென்பாகம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மீன்பிடி துறைமுகம் பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.
அந்த லாரியில் 200 லிட்டர் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அந்த லாரியை சோதனை செய்த போது, அந்த பேரல்களில் டீசல் போன்ற எண்ணெய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதில் இருந்த 4ஆயிரம் லிட்டர் பயோ டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.5லட்சம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த லாரியை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், பயோ டீசலை சிவகங்கையில் இருந்து கொண்டு வந்து இங்குள்ள விசைப் படகுகளுக்கு ஏஜெண்டுகள் மூலம் சப்ளை செய்வதற்காக கொண்டு வந்ததாக கூறினார். பின்னர் அவரையும் பயோ டீசல் லாரியுடன் உணவு தடுப்பு பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)











Sivasree marine fuel supplySep 8, 2025 - 11:38:13 AM | Posted IP 162.1*****