» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது!

திங்கள் 8, செப்டம்பர் 2025 10:30:56 AM (IST)

தூத்துக்குடியில் கையில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடியில், திருநெல்வேலி பிரதான சாலை மேபாலம் அருகே மதுபான பாரில் ஒருவர் கையில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தென்பாகம் போலீசாரு குதகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் காவு ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு ரகளையில் ஈடுபட்ட அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர் எப்சிஐ குடோன் அருகே டைமண்ட் காலனியை சேர்ந்த லெனின் முருகன் மகன் பாரத் சக்கரவர்த்தி (29) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory