» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் 5 வாலிபர்கள் கைது!

திங்கள் 8, செப்டம்பர் 2025 10:19:51 AM (IST)

தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் மேற்கு காமராஜ நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் பொன்னுச்சாமி (43) இவர் தனது வீட்டு வேலைக்காக வைத்திருந்த இரும்பு பைப் தகரம் ஆகியவற்றை கடந்த 6ம் தேதி இரவு மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 10. ஆயிரம்ஆகும். இதுகுறித்து அவர் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் சிவசூரியா (18), ஜெயபாண்டி மகன் கார்த்திகேயன் (25), மாரியப்பன் மகன் கார்த்திக் ராஜா (20), கோமதி சங்கர் மகன் மாரிதாஸ் (21), பாரதி நகர் முதல் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் தினேஷ் (19) ஆகிய 5 பேரையும் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory