» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் ரகளை செய்த வாலிபர் கைது

ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:13:02 AM (IST)

சாத்தான்குளம் அருகே  கொம்மடிக்கோட்டையில் மதுபோதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை சந்திப்பு பகுதியில் ஒருவர் மது போதையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு தரும் வகையில் ரகளை செய்வதாக நேற்று தட்டார் மடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தட்டார்மடம் உதவி ஆய்வாளர் பொண்ணு முனியசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். 

அப்போது அங்கு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக போதையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்து எச்சரித்துள்ளனர். தொடர்ந்து அவர், பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் செயல்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், பெரியதாழை மேற்கு தெரு வைச்சேர்ந்த வால்டர் மகன் செல்வம் (25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory