» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ: 6 பேர் கைது!

சனி 6, செப்டம்பர் 2025 4:24:05 PM (IST)

நாசரேத் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர் கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). மற்றும் இவரது நண்பர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், எஸ்.ஐ. சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சமூக அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்ட ராமசுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர்களான நாசரேத் ஞானராஜ் நகரைச் சேர்ந்த முருகன் மகன் தங்கத்துரை (24), சாத்தான்குளம் அருகே சடையன்கிணறு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் இசக்கிமுத்து (19), அம்பலச்சேரியை சேர்ந்த முருகன் மகன் மாணிக்கராஜா(24), சின்னத்துரை மகன் மீனாட்சிசுந்தரம்(21), அம்பலச்சேரியை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் தளவாய்பாண்டியன்(26) ஆகிய 6 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் 6 பேரும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory