» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: பெண்கள் கோரிக்கை!

திங்கள் 30, ஜூன் 2025 3:12:33 PM (IST)



வல்லநாடு அருகே பாறைக்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் வட வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடை முன்பு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 

டாஸ்மாக் மதுக்கடையை துவங்கும் போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மதுக்கடை அருகே பஸ் ஸ்டாப் உள்ளது. மாணவ, மாணவிகள் அந்த வழியே செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த பகுதி மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory