» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டி.ஜி.பி.யிடம் சான்றிதழ் வாங்கிய தனிப்படை போலீசாருக்கு எஸ்பி வாழ்த்து

செவ்வாய் 17, ஜூன் 2025 8:51:02 AM (IST)



டி.ஜி.பி.யிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கிய தனிப்படை போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கரலிங்கபுரம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்குகளில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை போலீசாரின் சிறந்த பணிக்காக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் கடந்த 12.06.2025 அன்று சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

மேற்படி காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory