» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் : பொதுமக்கள் நாளை மனு அளிக்கலாம்

புதன் 4, ஜூன் 2025 8:50:20 AM (IST)

தூத்துக்குடி தாலுகாவில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தொடர்பாக நாளை (ஜூன் 4) மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதல்-அமைச்சர் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்துக்கே வந்து செயலாற்றும் வகையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை அறிவித்து உள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சியர், மாவட்ட அலுவலர்களுடன் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்வார்.

அதன்படி தூத்துக்குடி தாலுகாவில் வருகிற 18-ம் தேதி ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளார். இதனால் பொதுமக்களிடம் இருந்து வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பெற உள்ளனர். 

இந்த குழுவினர் தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில் மற்றும் முடிவைத்தானேந்தல், கீழத்தட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலகங்கள் ஆகியவற்றில் மனுக்கள் பெற உள்ளனர். எனவே பொதுமக்கள் அந்த இடங்களுக்கு சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை குழுவினரிடம் கொடுத்து பயனடையலாம் என்று தூத்துக்குடி தாசில்தார் முரளிதரன் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory