» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் பயணியிடம் நகைகளைத் திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 20, பிப்ரவரி 2025 8:27:11 AM (IST)

ரயில் பயணியிடம் நகைகளைத் திருடிய கேரள இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நடுவர் (எண் 4) நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எரிச்சம் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த காதர் மகன் சாகுல் ஹமீது (45). இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு தூத்துக்குடி - கோவை விரைவு ரயிலில் சென்ற பயணியிடம் இருந்து சுமார் 58 பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் தூத்துக்குடி ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 4) நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குபேர சுந்தர், குற்றம் சாட்டப்பட்ட சாகுல் ஹமீதுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு உதவி வழக்குரைஞர் கண்ணன் ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory