» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுதானிய வியாபாரியிடம் ரூ.2 லட்சம் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 20, பிப்ரவரி 2025 8:24:19 AM (IST)

விளாத்திகுளத்தில் சிறுதானிய வியாபாரியிடமிருந்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன்(70). இவர் சிறுதானியம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று நண்பகலில் தனியார் வங்கிக்கு சென்று ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு, அதை ஒரு பையில் வைத்து, தனது மொபெட்டின் முன் பகுதியில் வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு சென்றபோது, அவரை வழிமறித்த 3 பேர் அவரது சட்டையில் சேறு இருப்பதாக கூறியுள்ளனர். 

இதையடுத்து அவர் தனது மொபெட்டை நிறுத்திவிட்டு, அருகிலுள்ள கடைக்கு சென்று, தண்ணீர் பாட்டில் வாங்கி, தனது சட்டையை சுத்தம் செய்துள்ளார்.பின்னர் மொபெட்டுக்கு வந்தபோது, அதில் வைத்திருந்த பணப் பையை காணவில்லையாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory