» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தியால் குத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை

வியாழன் 20, பிப்ரவரி 2025 8:16:24 AM (IST)

திருச்செந்தூரில் யாசகம் பெறுபவரை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சுரேஷ் (37). இவர் திருச்செந்தூர் பைரவர் கோயிலில் சமையல் தொழிலாளியாக இருந்துள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் வெங்கடேஷ். இவர் பைரவர் கோயில் முன்பு யாசகம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், சுரேஷ், வெங்கடேஷை கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருச்செந்தூர்சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த சார்பு நீதிபதி செல்வபாண்டி, சுரேஷ§க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory