» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நியாயவிலை கடைகளில் பறக்கும் படை ஆய்வு: விற்பனையாளர்களுக்கு ரூ.12,600 அபராதம்!
புதன் 19, பிப்ரவரி 2025 10:42:28 AM (IST)
திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு நியாயவிலை கடைகளில் இணைப்பதிவாளர் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.
தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையில், துணைப் பதிவாளர்கள் மற்றும் 15 கூட்டுறவு சார்பதிவாளர்கள், மற்றும் 7 முதுநிலை ஆய்வாளர்கள், உள்ளிட்ட 24 கூட்டுறவு துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டாரங்களில் உள்ள 63 கூட்டுறவுத்துறை நியாயவிலை கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டது.
இதில் மேற்படி நியாயவிலைக் கடைகளில் இருப்பு குறைவு மற்றும் இருப்பு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு இருப்பு குறைவிற்காக ரூ.11,100/-அபராதமாக விதிக்கப்பட்டது. இதே போல் கூடுதலாக கண்டறியப்பட்ட பொருட்களுக்காக ரூ.1,500 அபராதம் என மொத்தம் ரூ.12600 அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.12600 அபராதம் விதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










