» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நியாயவிலை கடைகளில் பறக்கும் படை ஆய்வு: விற்பனையாளர்களுக்கு ரூ.12,600 அபராதம்!

புதன் 19, பிப்ரவரி 2025 10:42:28 AM (IST)

திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு நியாயவிலை கடைகளில் இணைப்பதிவாளர் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு நடத்தினர். 

தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையில், துணைப் பதிவாளர்கள் மற்றும் 15 கூட்டுறவு சார்பதிவாளர்கள், மற்றும் 7 முதுநிலை ஆய்வாளர்கள், உள்ளிட்ட 24 கூட்டுறவு துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டாரங்களில் உள்ள 63 கூட்டுறவுத்துறை நியாயவிலை கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டது. 

இதில் மேற்படி நியாயவிலைக் கடைகளில் இருப்பு குறைவு மற்றும் இருப்பு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு இருப்பு குறைவிற்காக ரூ.11,100/-அபராதமாக விதிக்கப்பட்டது. இதே போல் கூடுதலாக கண்டறியப்பட்ட பொருட்களுக்காக ரூ.1,500 அபராதம் என மொத்தம் ரூ.12600 அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.12600 அபராதம் விதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory