» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆழ்வார்திருநகரி கோவிலில் மாசித்திருவிழா தெப்ப உற்சவம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புதன் 19, பிப்ரவரி 2025 8:13:04 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலையும் மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா ெசன்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 13-ந் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு கருட சேவை நடந்தது. ஒன்பதாம் திருவிழாவான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
பத்தாம் நாள் திருவிழாவில் நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய தாயார்களுடன் சுவாமி பொலிந்து நின்றபிரான் தெப்பத்திற்கு எழுந்தருளினார். தெப்பத்தில் சுவாமி, தாயார்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தெப்பம் மூன்று முறை வலம் வந்தது. இதில் தெப்பத்தின் கரையோரங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (புதன்கிழமை) இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை மாசித்திருவிழா தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாளைமறுநாள் காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளி திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு பல்லக்கில் ஆழ்வார்திருநகரி எழுந்தருளுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










