» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காரில் கடத்திய 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : டிரைவர் கைது
புதன் 19, பிப்ரவரி 2025 7:57:37 AM (IST)

கோவில்பட்டி அருகே ஆம்னி காரில் கடத்திய 900 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து கயத்தாருக்கு கிளவிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் தலைமையில் தனிப் பிரிவு போலீசார் கிளவிப்பட்டி பகுதிக்குச் சென்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டபோது காரில் 900கிலோ ரேஷன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த டிரைவர் அய்யனாா் ஊத்து கிணற்றுத் தெருவைச் சோ்ந்த மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், காருடன், அரிசி மற்றும் டிரைவர் மணிகண்டனை தூத்துக்குடி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் அரிகண்ணனிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை (40) கைது செய்தனா்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










