» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காரில் கடத்திய 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : டிரைவர் கைது

புதன் 19, பிப்ரவரி 2025 7:57:37 AM (IST)



கோவில்பட்டி அருகே ஆம்னி காரில் கடத்திய 900 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து கயத்தாருக்கு கிளவிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் தலைமையில் தனிப் பிரிவு போலீசார் கிளவிப்பட்டி பகுதிக்குச் சென்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டபோது காரில் 900கிலோ ரேஷன் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த டிரைவர் அய்யனாா் ஊத்து கிணற்றுத் தெருவைச் சோ்ந்த மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், காருடன், அரிசி மற்றும் டிரைவர் மணிகண்டனை தூத்துக்குடி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் அரிகண்ணனிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை (40) கைது செய்தனா்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory