» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)



திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் நடந்தது.
 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர், சாத்தான்குளம்,ஏரல் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட விவசாயிகள், வேளாண்மை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கருமேணி ஆறு பாசனத்தில் சுப்பராயபுரம் அணைக்கட்டில் உயரமான ஷட்டர் அமைத்திருப்பதாக விவசாயிகள் கேள்வி எழுப்பினர். மேலும் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், குற்றச்சாட்டுகளை தெரிவித்தும் விவசாயிகள் பேசினர்.மேலும் வருகை பதிவேடு என கையெழுத்து வாங்கிக்கொண்டு பின்பு அதில் தீர்மானங்களை விவசாயிகளுக்கு தெரியாமல் நிறைவேற்றுவதாக புகார் தெரிவித்தனர். கூட்டத்தில் திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் கிராம அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory