» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)
2025 - 2026 வரவு செலவு அறிக்கையில் மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது 2030 ம் ஆண்டில் 1.5 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மூத்த பெருமக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023 என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
முதியோர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் முதலீடுகள் தேவைப்படுகின்றது. ஆகவே மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023 ல் வரையறை செய்துள்ள மூத்த பெருமக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளான உடல்நலம், வருமானம், உறைவிடம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு 2025-2026 வரவு செலவு அறிக்கையில் மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 59, நாள் : 04.09.2023 ன் படி செயல் திட்டங்கள் வகுத்து முதியோருக்கான மாநில கொள்கையை மிக விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

Nanjil N Selvam,kadayal.kanyakumari Dist.Feb 19, 2025 - 02:17:08 PM | Posted IP 172.7*****