» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தொகுப்பூதியம் அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் கூடுதலாக பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்சாரா)-Protection Officer(Non Institutional Care) பணியிடம் 1 தொகுப்பூதியம் ரூ.27,804/- என்ற அடிப்படையிலும், சிறப்புசிறார்காவல் அலகிற்கு 2 சமூகப்பணியாளர்கள் (Social Worker) பணியிடம் 1ற்கு ஒரு மாதத்திற்கு ரூ.18,536/- என்ற அடிப்படையிலும் தொகுப்பூதியம் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ”மிஷன் வத்சல்யா” (Mission Vatsalya) வழிகாட்டு நெறிமுறைகளின்படி கீழ்கண்ட தகுதிகளை கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்சாரா) Protection Officer(Non Institutional Care) – காலிப்பணியிடம்-01

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி /சமூகவியல் /குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேம்பாடு ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மன நலம் / சட்டம் / பொது சுகாதாரம் ஆகியவற்றில் 2 வருட அனுபவம் கொண்ட அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (10+2+3 அமைப்பு) . கணினியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 14.02.2025 அன்று 42 வயதிற்குமிகாமல் இருத்தல் வேண்டும்.

சமூகப்பணியாளர்கள் (Social Worker)-02

சமூகப்பணி(Social Work), சமூகவியல்(Sociology), சமூகஅறிவியல்(Social Science), ஏதேனும் ஒருபாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் (10+2+3 அமைப்பு) மேலும், கணினி இயக்குவதில் திறன் இருத்தல் அவசியம். 14.02.2025 அன்று 42 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். குழந்தைகள் நலன் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பங்களை தூத்துக்குடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தூத்துக்குடி மாவட்ட இணையதளமான www.thoothukudi.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.02.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் வாயிலாகவோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி - 628 003. தொலைபேசி எண்: 0461-2331188 என்ற முகவரிக்கு கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory