» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் அனைத்து முன்னுரிமை பெற்ற மற்றும் (PHH, AAY) அன்னயோஜனா அந்தியோதயா திட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகைகளை நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்திட தெரிவிக்கப்படுகிறது.
வெளியூரில் / வெளிமாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் நபர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு குடும்ப அட்டை எண்ணுடன் நேரில் சென்று தங்கள் விரல் ரேகைகளை பதிவுசெய்யது கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)











பொது நலக் கருதி உங்களில் ஒருவன்Feb 18, 2025 - 09:03:14 PM | Posted IP 162.1*****