» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது : மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு!

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:03:03 AM (IST)

திருச்செந்தூா் அருகே சாராயம் காய்ச்சியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.  400 மிலி சாராயம் மற்றும் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே மானாடு சுந்தரபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் திருச்செந்தூா் தாலுகா போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சுந்தரபுரம் அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் (38) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றபோது, அங்கிருந்த 3 போ் போலீசாரை கண்டதும் தப்பிஓட முயன்றனா். 

அவா்களில் இருவா் போலீசாரிடம் பிடிபட்டனா். பிடிபட்டவா்கள் செல்வகுமாா் மற்றும் அதே ஊரை சோ்ந்த ஜெயமுருகன் (42) என்பதும், தப்பி ஓடியவா் அதே பகுதியைச் சோ்ந்த சிவபெருமாள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவா்கள் 3 பேரும், கள்ளச் சாராயம் காய்ச்சியுள்ளனா். அவா்களிடமிருந்து 400 மிலி சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து உதவி ஆய்வாளா் முத்துசெல்வம் வழக்குப்பதிவு செய்தாா். ஆய்வாளா் இன்னோஷ்குமாா் விசாரணை நடத்தி செல்வகுமாா், ஜெயமுருகன் ஆகியோரை கைது செய்தாா். மேலும் தப்பி ஓடிய சிவபெருமாளை போலீசார் தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory