» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடலில் சங்குகுளிக்க சென்ற வாலிபர் திடீர் மாயம் : தேடும் பணி தீவிரம்!

திங்கள் 17, பிப்ரவரி 2025 9:01:57 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் சங்குகுளிக்க சென்ற வாலிபர் திடீரென காணமல் போனது குறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி குருஸ்புரத்தைச் சேர்ந்தவர் டேனியல் மகன் சாம்சன் (21), இவர் இன்று காலை பைபர் படகில் 3பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றனர். திரேஸ்புரத்திலிருந்து 10 கடல் மைல் தொலைவில் சங்கு குளிப்பதற்காக 2 பேர் கடலுக்குள் இறங்கினர். சாம்சன் படகில் இருந்தாராம். பின்னர் கடலுக்குள் சென்ற 2 தொழிலாளர்களும் மேலே வந்து பார்த்தபோது, படகில் இருந்த சாம்சனை காணவில்லையாம். 

உடனடியாக கடலுக்குள் தேடியும் கிடைக்கவில்லையாம். மாலை 6 மணி வரையும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக இது குறித்து தூத்துக்குடி தருவைகுளம் மரைன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நாளை காலை மீண்டும் சங்குகுளி தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory