» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலில் சங்குகுளிக்க சென்ற வாலிபர் திடீர் மாயம் : தேடும் பணி தீவிரம்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 9:01:57 PM (IST)
தூத்துக்குடியில் கடலில் சங்குகுளிக்க சென்ற வாலிபர் திடீரென காணமல் போனது குறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி குருஸ்புரத்தைச் சேர்ந்தவர் டேனியல் மகன் சாம்சன் (21), இவர் இன்று காலை பைபர் படகில் 3பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றனர். திரேஸ்புரத்திலிருந்து 10 கடல் மைல் தொலைவில் சங்கு குளிப்பதற்காக 2 பேர் கடலுக்குள் இறங்கினர். சாம்சன் படகில் இருந்தாராம். பின்னர் கடலுக்குள் சென்ற 2 தொழிலாளர்களும் மேலே வந்து பார்த்தபோது, படகில் இருந்த சாம்சனை காணவில்லையாம்.
உடனடியாக கடலுக்குள் தேடியும் கிடைக்கவில்லையாம். மாலை 6 மணி வரையும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக இது குறித்து தூத்துக்குடி தருவைகுளம் மரைன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நாளை காலை மீண்டும் சங்குகுளி தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










