» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடை உயர்ந்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு!

திங்கள் 17, பிப்ரவரி 2025 4:29:54 PM (IST)



நாசரேத் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையை உயர்ந்த வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நெல்லை-திருச்செந்தூர் இடையேயுள்ள ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணிகள் இன்று 17ம் தேதி திங்கட்கிழமை காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் தொடங்கி நடைபெறுவதாக தென்னக ரயில்வேயின் பொறியாளர் பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நெல்லை திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களான பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, கச்சனாவிளை, குரும்பூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தற்போதுள்ள தாழ்மட்ட நடைமேடை எண் 1 ஐ உயர்மட்ட நடைமேடையாக உயர்த்தவும், செய்துங்கநல்லூர் நிலையத்தில் நடைமேடை எண் 1 மற்றும் 2ஐ உயர்த்தும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.

அதுபோல நெல்லை- திருச்செந்தூர் இடையே உள்ள முக்கிய நகரமான நாசரேத் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையும் உயரம் மற்றும் நீளம் குறைவாக உள்ளது. மேலும் நாசரேத் ரயில் நிலையத்தில் சிலநேரங்களில் ரயில்கள் சந்திப்பு ஏற்படுவதால் 2வது நடை மேடையில் ரயில் வந்து செல்கிறது. இந்த நடைமேடை தாழ்வாக அமைந்துள்ளதால் வயதானோர் ரயிலில் ஏற, இறங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். 

எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள், விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் ரயில் நிலையத்தின் 2வது நடைமேடையையும் உயர்த்த வேண்டும் என நாசரேத் பகுதி மக்கள் மற்றும் ரயில் பயணிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory