» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் கிடந்த ஹேண்ட்பேக்கை ஒப்படைத்த பெண்ணுக்கு காவல்துறையினர் பாராட்டு!

திங்கள் 17, பிப்ரவரி 2025 1:01:11 PM (IST)



திருச்செந்தூரில் சாலையில் கிடந்த ஹேண்ட்பேக்கை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியில் வசித்து வரும் தங்கவேல் என்பவரது மகன் லிங்கம் (40) இவர் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வளைகாப்பு நிகழ்சிக்கு வந்துள்ளார். வரும் வழியில் அவரது கைப்பையை தொலைத்துவிட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு கிடைக்காததால் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு சென்றார். 

பின் முத்தையாபுரம் எம். தங்கம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி சமுத்திரகனி (40). கூலி வேலை செய்துவரும் இருவர் சாலையில் கிடந்த ஹேன் பேக்கை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதில், ரூ.4000 பணமும், 1 ஜோடி வெள்ளி வளையலும் இருந்தது. மேலும் கைப்பை தொலைத்த நபர்களுக்கு தகவல் தெரிவித்து காவல் நிலையம் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சமுத்திரகனியின் நேர்மையை பாராட்டி அவருக்கு காவல்துறையினர் சால்வை அணிவித்து கெளரவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory