» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது ஜீப் மோதி விபத்து: மாட்டு வியாபாரி பலி

திங்கள் 17, பிப்ரவரி 2025 10:43:38 AM (IST)

கயத்தாறு அருகே மோட்டார் பைக் மீது ஜீப் மோதிய விபத்தில் மாட்டு வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள சிதம்பரபுரம் மேட்டு தெருவை சேர்ந்த விவசாயி வீரபுத்திரத்தேவர் மகன் சுந்தரம் (63), இவர் கயத்தாரில் இருந்து வடக்கு இலந்த குலத்திற்கு மோட்டார் பைக்கில் வியாபாரத்திற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது விருதுநகரில் இருந்து புளியம்பட்டி நோக்கி சென்ற ஜீப், அவரது மோட்டார் பைக் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுந்தரத்திற்கு, முருகானந்தம் என்ற மனைவியும், செல்வகுமார்  என்ற மகனும் உள்ளனர். விபத்து குறித்து கயத்தாறு சப் -இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் வழக்கு பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சுதா தேவி விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory