» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாடியில் இருந்து தவறிவிழுந்த வடை மாஸ்டர் சாவு
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:35:51 AM (IST)
திருச்செந்தூரில் 4வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து வடை மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்செந்தூர் மணல்மேடு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் காசி மகன் மோகன் (50), இவருக்கு திருமணமாகி சங்கரேஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்ததும் ஓட்டலில் உள்ள 4வது மாடியில் வைத்து மதுபானம் குடித்தாராம்.
மது போதையில் அவர் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










