» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாடியில் இருந்து தவறிவிழுந்த வடை மாஸ்டர் சாவு

திங்கள் 17, பிப்ரவரி 2025 10:35:51 AM (IST)

திருச்செந்தூரில் 4வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து வடை மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். 

திருச்செந்தூர் மணல்மேடு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் காசி மகன் மோகன் (50), இவருக்கு திருமணமாகி சங்கரேஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்ததும் ஓட்டலில் உள்ள 4வது மாடியில் வைத்து மதுபானம் குடித்தாராம். 

மது போதையில் அவர் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory