» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாயம் வளம்பெற தூத்துக்குடி மேல்மருவத்தூர் சக்திபீடத்தில் பெண்கள் இளநீர் அபிஷேகம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 2:40:34 PM (IST)

தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அருளாசியுடன் தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற ஆயிரக்கணக்கான பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து அன்னை ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனர்.
விவசாயம் வளம்பெறவும், மக்கள் வளமுடன் வாழவும், தொழில்வளம் சிறக்கவும், தொற்று நோயிலிருந்து மக்களை காக்கவும் வேண்டி பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அபிஷேக நிகழ்ச்சியை கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு சக்திபீட பொருளாளர் அனிதா, மகளிர் அணி யசோதா ஆகியோர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை செய்தனர். அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார்.

விழாவில், இந்தியன் வங்கி மேலாளர் தியாகராஜன், யூகோ வங்கி மேலாளர் பரத்குமார், சக்திபீட துணைத் தலைவர் திருஞானம், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் கோபிநாத், ஆத்தூர் சண்முகசுந்தரி, தளவாய்புரம் ராஜ், அண்ணாநகர் மன்றம் சிவஞானம், பேச்சியம்மாள், சக்திபீட பொறுப்பாளர்கள் வேல்ராஜ், மந்திரம், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பச்சியம்மாள், செல்வி, அகிலா, முத்துலெட்சுமி, சாந்தி, வீரலெட்சுமி உட்பட ஏராளமான செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










