» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!

ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

கோவில்பட்டியில் டிரைவரைத் தாக்கி ஆட்டோவை கடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அத்தைகொண்டான் சாலை காந்தி நகரைச் சேர்ந்த பிச்சையா மகன் காளைமுத்து என்ற காளைமுத்துப் பாண்டி (50). டிரைவரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலைய நிறுத்தத்தில் தனது ஆட்டோவில் இருந்தார். அப்போது, 3 பேர் வந்து சவாரிக்காக அவரை அழைத்துச் சென்றனராம்.

இந்நிலையில், காளைமுத்துப்பாண்டி அத்தைகொண்டான் கண்மாய்க் கரை மயானம் அருகே தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மயங்கிக் கிடந்ததாகவும், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும் அவரது சகோதரர் ரமேஷுக்கு செல்லத்துரை என்ற செல்வம் தகவல் தெரிவித்தாராம். அதன்பேரில், ரமேஷ் மருத்துவமனைக்குச் சென்று காளைமுத்துப் பாண்டியைப் பார்த்தார். 

பின்னர், தனது அண்ணனைத் தாக்கி ஆட்டோவை கடத்திச் சென்றோர் குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து, தூத்துக்குடி முனியசாமி கோயில் தெரு சுப்பிரமணியன் மகன் ஆட்டோ டிரைவர் ராமலட்சுமணன் (29), ஆசாரிவிளை தெரு ஜோன்ஸ்ராஜ் மகன் தேவராஜன் என்ற சாம் (26), நந்தகோபாலபுரம் பிரதான சாலை கந்தையா மகன் கோகுல்ராம் என்ற கானா கோகுல்ராம் என்ற விஜி (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory