» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!

ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்களின் தொடா் வேலை நிறுத்தம் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், நேற்று திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் ஆழ்கடலுக்குச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் கரை திரும்பாததாலும், நிலவு ஒளி காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. 

இதன் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. இதில், சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,100, ஊளி ரூ.700, விளை மீன் ரூ.650, பாறை மீன் ரூ.500, கட்டா ஒரு கூடை ரூ.700, நண்டு ரூ.600 என விற்பனையானது. மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.


மக்கள் கருத்து

Feb 16, 2025 - 09:12:23 AM | Posted IP 162.1*****

ஆமா ஆமா அவங்க மீன்களை கஷ்டப்பட்டு பண்ணல வளர்த்தங்களாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory