» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்களின் தொடா் வேலை நிறுத்தம் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், நேற்று திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் ஆழ்கடலுக்குச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் கரை திரும்பாததாலும், நிலவு ஒளி காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.
இதன் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. இதில், சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,100, ஊளி ரூ.700, விளை மீன் ரூ.650, பாறை மீன் ரூ.500, கட்டா ஒரு கூடை ரூ.700, நண்டு ரூ.600 என விற்பனையானது. மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)











ஓFeb 16, 2025 - 09:12:23 AM | Posted IP 162.1*****