» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் ஒருவர் பலி : நண்பர் படுகாயம்!
சனி 15, பிப்ரவரி 2025 9:51:27 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் பைக் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சுப்பையா (65), இவர் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான சாகுல் ஹமீது மகன் செய்யது இப்ராஹிம் (63), என்பவர் உடன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயகுறிச்சிருக்கு சென்று கொண்டிருந்தார். கருங்குளம் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி பாலம் தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் தலையில் காயம் அடைந்த சுப்பையா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். செய்யது இப்ராஹிம் சிகிச்சைகாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சனி 18, ஜூலை 2026 8:32:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் : 20 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.75.25 லட்சம் வசூல்!
சனி 18, ஜூலை 2026 5:17:07 PM (IST)

தொல்காப்பியத்தைத் தொடர்ச்சியாக எழுதி உலக சாதனை முயற்சி: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள்!
சனி 18, ஜூலை 2026 4:53:16 PM (IST)

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு
சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)

ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:46:17 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அஞ்சல்துறை அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:30:02 PM (IST)








