» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

சனி 25, மே 2024 4:04:08 PM (IST)



தூத்துக்குடி வாகைகுளம் புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கான இம்மையிலும் மறுமையிலும் பலன்தரக் கூடிய வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

இப்பயிற்சியில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு, பொதுமேலாளர் (வளர்ச்சி) ஜெயக்குமார், பொதுமேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், ஸ்காட் கல்விக் குழும திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளின் இயக்குநர் சி.கே. இரவி சங்கர், முதல்வர் ஜாஸ்பர் ஞான சந்திரன், மாணவர் சேர்க்கை இயக்குநர் ஜான் கென்னடி, இயக்குநர் ஜார்ஜ் கிளிண்டன், நிர்வாக அதிகாரிகள் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஆழியார் அறிவு திருக்கோவில் பேராசிரியர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருமான பொறியாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அவர் தனது சிறப்பு உரையில் மாணவர்கள் இளம்பருவத்தில் கற்கும் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயம் பலன் தரும். உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியம், மன அமைதி, அதிக மதிப்பெண் தேர்ச்சி பெறுதல், பக்குவம் அடைந்த பண்பாடான வாழ்க்கை போன்ற நற்பலன்கள் இத்தகைய வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற முடியும் என்று குறிப்பிட்டார். 

பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை திறன் மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஜோ பேட்டரிக் ஞானராஜ், பாலின் விசு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory