» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பறக்கும் படை சோதனையில் ரூ.4.20 லட்சம் பறிமுதல் : பறக்கும் படையினர் நடவடிக்கை!
வியாழன் 28, மார்ச் 2024 8:47:30 PM (IST)
தூத்துக்குடியில் பறக்கும் படை சோதனையில் இன்று ஒரே நாளில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் வந்த அஜய் என்பவர் உரிய ஆவணம் இன்றி மூன்று லட்சத்து 61,200 கொண்டு சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தூத்துக்குடி துணை தாசில்தார் ரம்யாதேவி ஒப்படைத்தனர். இதே போல் எட்டையாபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அனுமதி இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60,000 பறிமுதல் செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.