» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேம்பாலம் தடுப்புச் சுவரில் அரசு பஸ் மோதி விபத்து : தூத்துக்குடியில் பரபரப்பு!

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 10:36:12 AM (IST)



தூத்துக்குடியில் மேம்பாலத்தில் தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர். 

மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து இன்று அதிகாலை தூத்துக்குடி -  திருச்செந்தூர் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் சேர்ந்த முருகப்பெருமாள் (43) என்பவர் டிரைவராகவும், முத்து செல்வம் என்பவர் கண்டக்டராகவும் பணியில் இருந்தனர். பஸ்ஸில் 37 பயணிகள் செய்தனர். 

இன்று காலை 3.50 மணியளவில் தூத்துக்குடி எம்ஜிஆர் நகர் மேம்பாலத்தில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்ஸின் முன்பகுதி சேதம் அடைந்தது. ஆனால், 37 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக பயணிகள் மாற்று பேருந்து மூலம் திருச்செந்தூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

JEBASINGHApr 28, 2024 - 05:53:29 PM | Posted IP 172.7*****

REST GODUIKAA VANDUM

ஐயப்பன்Apr 28, 2024 - 11:36:33 AM | Posted IP 172.7*****

அடிஷனலாக இயக்கினால் இப்படித்தான் ஆகும்

கணேஷ்Apr 28, 2024 - 11:34:46 AM | Posted IP 172.7*****

வழித்தடத்தில் இயக்காவிட்டால் இப்படித்தான் ஆகும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory