» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் ரேஷன் கடை ஊழியர் பலி

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 10:04:21 AM (IST)

கயத்தாறு அருகே பைக் விபத்தில் பலத்த காயமடைந்த ரேஷன் கடை ஊழியர் பலி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமம் சந்திதெருவை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் அருணாசலம் (50). இவர் கயத்தாறு மற்றும் தலையால் நடந்தான் குளம் கிராமத்திற்கு ரேஷன் கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அய்யனார்ஊத்து கிராமத்தில் இருந்து கயத்தாறுக்கு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காற்றாலை அருகே கயத்தாறு- தேவர்குளம் சாலையில் சென்றபோது பைக் திடீரென நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. 

இதனால் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அருணாசலத்தை 108 ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான அருணாசலத்துக்கு முருகம்மாள் என்ற மனைவியும், சிவனேஷ் (19), நாராயணமூர்த்தி (17) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory