» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

வியாழன் 28, மார்ச் 2024 7:52:40 AM (IST)



கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில்  வருஷாபிஷேகம் கோலாகலமாக  நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது. பின்னா் கதிா்வேல் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

தொடா்ந்து காலை 10.20 மணிக்கு யாகசாலையில் இருந்து தீா்த்தக்குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரகாரத்தில் வலம் வந்து முருகா், விநாயகா் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி விமானங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் கதிா்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory