» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேம்பாலத்தில் விபத்து: லாரி டிரைவர் பலி!

திங்கள் 29, ஏப்ரல் 2024 8:44:03 AM (IST)

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் சாலை தடுப்பில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள தெற்கு இலந்தைகுளம், நடுத்தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ராமகிருஷ்ணன் (62). லாரி டிரைவர். இவா், நேற்று திருநெல்வேலியிலிருந்து சிவகாசிக்கு லாரியில் பழைய பேப்பா்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தாா். திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் லாரி கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பில் மோதியதாம். 

இதனால், ராமகிருஷ்ணன் கீழே குதித்தாராம். அப்போது, அவா் மீது லாரியின் பின்பக்க டயா் ஏறியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory