» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி நாளை வேட்பு மனு தாக்கல்!
திங்கள் 25, மார்ச் 2024 3:21:36 PM (IST)
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி நாளை (26.03.2024) செவ்வாய் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இதுகுறித்து திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் "நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக கனிமொழி கருணாநிதி தி.மு.கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி கருணாநிதி 26.03.2024 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பிருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய இருக்கிறார். வேட்பு மனுதாக்கல் நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.