» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் பிரச்சனையால் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

ஞாயிறு 24, மார்ச் 2024 10:14:42 AM (IST)

தூத்துக்குடியில் கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :  தூத்துக்குடி, பண்டாரம்பட்டியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் பாலமுருகன் (34). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். பாலமுருகன் 2021ஆம் ஆண்டு புதிய வீடு கட்டுவதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், அவா் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். தகவலின் பேரில் சிப்காட் போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory