» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

புதன் 29, நவம்பர் 2023 4:43:04 PM (IST)



குரும்பூர் அருகே பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் 2வது செவ்வாய் கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடந்து வருகிறது. அதேபோல் கார்த்திகை மாத திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. 

இதில் கலந்து கொண்ட பெண்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் வழிபட்டனர். இதில் மதுரை, நெல்லை, திருச்செந்தூர், குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஏரல், தென்திருப்பேரை, நாசரேத், சாத்தான்குளம், ஆறுமுகநேரி, காயல்பட்டிணம், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் கோயில் தர்மகத்தா ஜெயராகவன், விஜயராகவன், ஐஓபி முருகன், நாசரேத் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory