» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் மீது லாரி மோதிய விபத்தில் 3பேர் காயம்: மதுபோதையில் லாரியை இயக்கிய டிரைவர் கைது
வெள்ளி 23, ஜனவரி 2026 5:12:27 PM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே மதுபோதையில் வாகனத்தை இயக்கி காயம் ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலசமுத்திரம் பகுதியில் கடந்த 20.01.2026 அன்று கார் மற்றும் லாரி ஆகிய வாகனங்கள் விபத்துகுள்ளானதில் காரில் வந்த 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் லாரி ஓட்டுநரான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இர்பானுல்லாபெக் (35) என்பவர் மதுஅருந்திவிட்டு வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில் காரில் வந்த 3 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மதுபோதையில் வாகனத்தை இயக்கி காயம் ஏற்படுத்தியதால் கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்காக பதிவு செய்து மேற்படி இர்பானுல்லாபெக்-ஐ காவல்துறையினர் கைது செய்தனர்.
அதன்படி வாகனத்தை மதுபோதையில் ஓட்டி ஒருவர் காயம் ஏற்படுத்தினால் கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்கு பதிவு செய்யப்படும். இக்குற்றத்திற்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.
அதே போன்று வாகனத்தை மதுபோதையில் ஓட்டி ஒருவர் உயிரிழப்பை ஏற்படுத்தினால், கொலை அல்லாத மரணம் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறான குற்றத்திற்கு நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து தங்களுக்கும், தங்களால் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும், அதனை மீறி இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலசமுத்திரம் பகுதியில் கடந்த 20.01.2026 அன்று கார் மற்றும் லாரி ஆகிய வாகனங்கள் விபத்துகுள்ளானதில் காரில் வந்த 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் லாரி ஓட்டுநரான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இர்பானுல்லாபெக் (35) என்பவர் மதுஅருந்திவிட்டு வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில் காரில் வந்த 3 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மதுபோதையில் வாகனத்தை இயக்கி காயம் ஏற்படுத்தியதால் கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்காக பதிவு செய்து மேற்படி இர்பானுல்லாபெக்-ஐ காவல்துறையினர் கைது செய்தனர்.
அதன்படி வாகனத்தை மதுபோதையில் ஓட்டி ஒருவர் காயம் ஏற்படுத்தினால் கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்கு பதிவு செய்யப்படும். இக்குற்றத்திற்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.
அதே போன்று வாகனத்தை மதுபோதையில் ஓட்டி ஒருவர் உயிரிழப்பை ஏற்படுத்தினால், கொலை அல்லாத மரணம் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறான குற்றத்திற்கு நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து தங்களுக்கும், தங்களால் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும், அதனை மீறி இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகையிலை பொருட்களை கடத்திய 3பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!
வெள்ளி 23, ஜனவரி 2026 5:17:28 PM (IST)

தூத்துக்குடி உப்பளங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: 25 லட்சம் டன் உப்பு உற்பத்திக்கு இலக்கு
வெள்ளி 23, ஜனவரி 2026 3:56:03 PM (IST)

தைப்பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் : இந்து முன்னணி கோரிக்கை!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:19:39 PM (IST)

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:13:56 PM (IST)

தன்பாடு உப்பு தொழிலாளர்கள் சங்க கட்டிடம் திறப்பு விழா : மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 3:03:15 PM (IST)

தூத்துக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தினம் : ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 12:11:06 PM (IST)








