» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
ஆதிச்சநல்லூரில் நாசரேத் கல்லூரி சார்பில் கருத்தரங்கு
திங்கள் 12, பிப்ரவரி 2024 4:05:59 PM (IST)
நாசரேத் மார்க்காசிஸ் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
இந்த கருத்தரங்குக்கு தமிழ் துறை சுயநிதி பிரிவு துறை தலைவர் ஜீலியட் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் ஜெனிடா வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். ஆய்வு மாணவர் ராஜேஷ் மியூசியம் குறித்து விளக்கம் அளித்தார். உதவி பேராசிரியர் பாத்திமா நன்றி கூறினர். மாணவர்கள் ஆதிச்சநல்லூரி பி சைட், மற்றும் சி சைட்டை பார்வையிட்டனர். அதன் பின் அவர்கள் நெல்லையில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றனர்.