» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் தாத்தா- பாட்டிகள் தினம்!

செவ்வாய் 12, செப்டம்பர் 2023 9:50:14 AM (IST)



தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. 

பள்ளி தாளாளர் ஆ.ஜெயா சண்முகம் தலைமையில் தாத்தா, பாட்டிகள் தினம் நடை பெற்றது. ஆசிரியை இசக்கியம்மாள் வரவேற்று பேசினார். மாணவ- மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் வந்திருந்து பேரக்குழந்தைகளை பூக்களை தூவி ஆசீர்வாதம் செய்த னர். மாணவ- மாணவிகளின் சிறப்புரை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

'தாத்தா பாட்டிகள்' தினத்தை பற்றி ஆசிரியை உதயம்மாள் சிறப்புரையாற்றினார். கிருஷ்ண ஜெயந்தி விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளும் வழங்கப் பட்டது. பழைய பாடல்களுக்கு தாத்தா, பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளுடன் ஆடி மகிழ்ந்தனர். ஆசிரியை நாகேஸ்வரி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory