» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புறையூர் நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைபிடிப்பு
சனி 9, செப்டம்பர் 2023 9:58:09 AM (IST)
புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் செப்.8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டிற்கான கருப்பொருள் நிலையான அமைதியான உலகத்தை உருவாக்குதல், எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் குரும்பூர் அருகே உள்ள புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் எழுத்தறிவு தின லோகோ வடிவில் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ் நியூமன், துணை தலைமையாசிரியை பெல்சியா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.