» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கீழக்கல்லாம்பாறை ஆசிரியை ராஜாத்தி கிரசன் சியாவுக்கு நல்லாசிரியர் விருது!
புதன் 6, செப்டம்பர் 2023 12:51:47 PM (IST)
கீழக் கல்லாம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை ராஜாத்தி கிரசன் சியா நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், தென்திருப்பேரை அருகில் உள்ள கீழக்கல்லாம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக ராஜாத்தி கிரசன் சியா பணியாற்றி வருகிறார்.இவரது பணியினைப் பாராட்டி இவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
நல்லாசிரியர் விருதினை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகி யோர் முன்னிலையில் தமி ழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு சான்றிதழும், பரிசும் வழங் கினார்.